இயற்கை இயற்கையாக இருந்தால் மாத்திரமே எதுவும் சாத்தியம்..!

இங்கே நான் நான்
எனும் எண்ணம்
உனை எனை
இந்தப் பிரபஞ்சமே
வெறுத்து ஒதுக்கும் …!

நீ நான் வணங்கும்
கடவுள் எவனுமே …
உன்னை என்னைக்
கண்டு கொள்ள மாட்டான்…
நீ உனது பொய் நம்பிக்கையில்
வாழுகிறாய் …!

இங்கே கடவுள் கடவுள்
என எவனெவனை
மதிக்கும் மதமும் கூட
இங்கே இயற்கை நலமாக
இருந்தால் மட்டுமே
வாழ முடியும் …!

அதன் பிறகு
தான் இங்கு இத்தனை இத்தனை
கடவுள்களை வணங்கிய போதும்
நாமும் வாழமுடியும் …!

நாம் வணங்கும் கடவுளும்
வாழ்வான்
எனத் தெரிந்து கொள்ளக் கூட
நேரமின்றி …
அறிவும் இன்றி அலைகிறது …
இந்த ஆறறிவு மனித இனம் …!

இதனை
அவ்வப்போது இந்த இயற்கையே …
சுனாமி … பூகம்பம் … எனும் ரூபத்தில்
பாடம் நடத்திக்
கொண்டிருந்த போதும் …
மனிதனுக்கு இன்னும்
ஆறறிவு பெரும்பாலும் வேலை செய்யவே இல்லை … என்பதே உண்மை…!

😭😭😭
கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *