மௌனத்தின் வலிகள்..!

காதல்

உணர்வும்

இயல்பும்

திரிபும்

விருப்பும்

வெறுப்பும்

நம்பிக்கையும்

துரோகமும்

சரி

நிறை

கலந்த

பயணி.

அது

புரிந்துணர்வு

ஒப்பந்தத்தால்

மட்டும்

நிலைப்பு

பெறுவதில்லை.

இரண்டு

எதிர்பார்ப்புகள்

சுயங்கள்

என்றும்

நீடித்து

காலத்தால்

நிலைப்பதில்லை.

சந்ததிகளின்

உறவு

தொடர்ச்சியில்

எழுச்சியில்

கிளர்ச்சியில்

சில

போது

சாந்தியும்

தற்சார்பும்

பெறுகின்றன.

இதுவும்

அரிதாக!

அரியதாக.

தேவையும்

கவர்ச்சியும்

துடிப்பும்

காதலும்

காமமும்

இச்சையும்

மோகமும்

கலந்த

கூத்துகளை

இங்கு

கற்பு

ஹார்மோன்

என்று

நீதியும்

அறிவியலும்

பெயர்

வைக்கலாம்.

இங்கு

உறவுகள்

தன்

பவித்ர

தன்மையை

காமம்

என்ற

சேற்றில்

மேய்ந்து

அலையும்

பன்றிகள்

ஆயின.

உலகம்

காமத்திற்கு

அதிக

முக்கியத்துவம்

கொடுத்து

மாயையில்

உறங்கின

இங்கு

திறந்து

மூட

மறைக்க

துறக்க

மௌனத்தின்

வலிகள்

மட்டுமே.

சதைகளால்

காமம்

பசி

ஆறும்

வரை

அது

முடியும்

வரை

போராட்டமும்

தவிப்பும்

நிலையும்

நிலையாமையும்

கலந்த

உயிரின்

மொழிகள்.

அதன்

இலக்கணங்கள்

யாராலும்

இன்னும்

வரையறுக்கப்படவில்லை.

அது

அசுரனையும்

தேவனையும்

முனிவனையும்

மனிதனையும்

கடவுளையும்

பிரித்து

பார்ப்பதில்லை.

கேலோமி🌹🌹
மேட்டூர் அணை 9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *