நாட்டை விட்டு மக்கள் வெளியேறுவதால் இந்த நிலைமை..!

நாட்டில் காணப்படும் பொருளாதார நிலைமை ,பொருட்களின் விலை உயர்வு என்பவற்றின் காரணமாக அதிகளவான புத்திஜீவிகள் மற்றும் பல துறைகளை சார்ந்த பொதுமக்கள் என பலரும பிற நாடுகளுக்கு செல்கின்றனர் இதன் காரணமாக இங்கு பல துறைகளுக்கும் ஆளனி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த வகையில் கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களின் பற்றாக்குறை காரணமாக பல்வேறு வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண்டி தேசிய வைத்தியசாலை, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை, குருணாகல் பொது வைத்தியசாலை, பதுளை பொது வைத்தியசாலை,

சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை உள்ளிட்ட பல்வேறு வைத்தியசாலைகள் கடும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

சேவையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் நாட்டிலிருந்து வௌியேறுகின்றமை சடுதியாக அதிகரித்தமையே இந்த பற்றாக்குறைக்கு காரணம் என,

அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களின் சங்க தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *