இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 90 பாலஸ்தீனிய பொது மக்கள் உயிரிழப்பு..!

கடந்த 24 மணித்தியாலத்தில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 90 பாலஸ்தீனிய பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக இங்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30410 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலானது கடந்த ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடாத்திவருகிறது.இதன் காரணமாக இரு தரப்பிலும் பல்லாயிரகணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

பல நாடுகள் சமாதான பேச்சுவார்த்தைக்கு முன்னின்றன. எனினும் எந்த வித பலனும் கிடைக்கப்பெறவில்லை.இஸ்ரேலானது போரினை தீவிரம் காட்டும் நோக்குடன் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *