வெப்பமான காலநிலை..!

நாட்டின் பல பிரதேசங்களில் இன்றைய தினம் வெப்ப நிலையானது அதிகளவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு, சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் அநுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் சில இடங்களில்,

மனித உடலால் உணரப்படும் வெப்பம் கவனத்துக்குரிய அளவில் இருக்கும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுப்பது,

கடுமையான வெளிப்புறச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவது போன்ற சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றவும் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *