காலாவதியான பொருட்களை வைத்திருந்த வர்த்தகருக்கு என்ன நடந்தது..!

காலாவதியான குளிர்பானத்தை விற்பனைக்காக காட்சிப்படுத்திய  வர்த்தகர்களுக்கு 28,000 ரூபாய் தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி மற்றும் மீசாலை பகுதியில் உள்ள இரு வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று,

சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டே போதே இவ்வாறு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின் போது , இருவரும் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து , இருவரையும் கடுமையாக எச்சரித்த மன்று , ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டமும் ,

மற்றைய நபருக்கு 08 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துள்ளதோடு கைப்பற்றப்பட்ட காலாவதியான குளிர்பானங்களை அழிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *