இலை உதிர்ந்தால்..!


இலை உதிர்ந்தால் !


இலைகள்
உதிர்ந்தால் …
மரம் மொட்டையாக
நிற்கும் …

தலை முடிகள்
உதிர்ந்து போன
மனிதனைப் போல …

ஆனால் மரங்களின்
இலையுதிர்தல்
மீண்டும் புத்துணர்வுடன்
துளிர்க்க …

அட …
மானுடா …
தலைமுடி …
கிடக்கட்டும் …

அது உதிர்ந்தால்
உதிர்ந்து விட்டுப்
போகட்டும் …

தன்னம்பிக்கை
உதிராமல்
பார்த்துக்கொள் …

அது தான் எப்போதும்
பசுமையின் காலம்
நமக்கு …

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *