வென்றது சென் ஜோண்ஸ்| வடக்கின் பெருஞ் சமர் நிறைவு

“வடக்கின் பெருஞ் சமர் ” என்று வர்ணிக்கப்படும் , யாழ் மத்திய கல்லூரி மற்றும் சென்ஜோன்ஸ் கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், சென்ஜோன்ஸ் கல்லூரி அணி வெற்றி பெற்றது.

117 ஆவது முறையாக நடைபெற்ற இந்த வடக்கின் சமர் பெரும் கிரிக்கெட் போட்டியில்  யாழ் சென். ஜோன்ஸ் கல்லூரி 10 விக்கெட்டுக்களால்  வெற்றிபெற்றுள்ளது.

கடந்த வியாழக்கிழமை முதல் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மைதானத்தில் நடைபெற்று இந்த கிரிக்கெட் பெரும் போட்டியில் இந்த வெற்றி பதிவுசெய்யப்பட்டுள்ளது.

யாழ். மத்தியகல்லூரி அணி 157 ஓட்டங்களையும் மற்றும் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி 228 ஓட்டங்களையும் முதல் இனிங்ஸ்க்காக பெற்றிருந்தன.


தமது இரண்டாம் இன்னிங்ஸிற்காக 71 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையிலிருந்து துடுப்பெடுத்தாடத் துவங்கிய யாழ். மத்திய கல்லூரி  57.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 149 ஓட்டங்கள் மாத்திரமே எடுத்தது.

யாழ். மத்திய கல்லூரியின் இரண்டாம் இன்னிங்ஸை நிறைவைத்தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்காக 79 ஓட்டங்களென நிர்ணயிக்கப்பட பதிலுக்கு  துடுப்பாடிய யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி அணியானது போட்டியின் வெற்றி இலக்கை 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 81 ஓட்டங்களுடன் அடைந்தது.  

சென். ஜோன்ஸ் கல்லூரியின் வெற்றி இலக்கை உறுதி செய்த அதன் துடுப்பாட்டத்தில் அரைச்சதம் விளாசிய உதயணன் அபிஜோய்சாந்த் 10 பௌண்டரிகள் அடங்கலாக 49 பந்துகளில் 50 ஓட்டங்கள் பெற்றார். அதேநேரம் அன்டர்சன் சச்சின் 30 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.  

போட்டியின் ஆட்டநாயகன் விருதினையும் சென். ஜோன்ஸ் கல்லூரியின் உதயனன் அபிஜோய்சாந்த் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *