இப்படியும் ஒரு கணவர்..!

சந்தேகத்தின் பேரில் மனைவியை கணவன் கொன்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மொரட்டுவ எகொட உயன பிரதேசத்தில் கணவன் தனது மனைவியை பெற்றோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தம்பதியினர் பிரதேசத்தில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்ததாகவும்,

சந்தேக நபரான கணவர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எகொட உயனவில் எரிபொருள் நிரப்பும் நிலையம் அருகில் உள்ள அங்கீகரிக்கப்படாத குடிசை வீட்டில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த பெண்ணுக்கு திருமணத்திற்குப் புறம்பான உறவு ஒன்று இருப்பதாக குற்றம் சுமத்தி கணவர் பெற்றோல் ஊற்றி,தீ வைத்து கொளுத்தியதால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த பெண் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *