நீண்ட நாட்களின் பின் மழை..!

நேற்று முதல் நாட்டின் பல பாகங்களில் மழை பெய்துள்ளது.கடினமான வெப்பம் பதிவாகி இருந்தது. இந்த நிலையிலேயே மழை பெய்துள்ளது.

இதன்படி
மன்னார் மாவட்டத்தில் தீவுப்பகுதி உள்ளடங்களாக முருங்கன், பேசாலை, மாந்தை, முசலி உட்பட பல்வேறு பகுதிகளில் நீண்ட நாட்களுக்கு பின்னர் மழை பெய்துள்ளது.

அத்துடன் மேல், மத்திய, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் மழை பெய்துள்ளது.

கடந்த ஒரு மாதமாக மேலாக தொடர்ச்சியாக நிலவி வந்த அதி உஷ்ணமான காலநிலை காரணமாக அதிகளவான வெப்பம் மற்றும்,

வறட்சி நாடு முழுதும் நிலவி வந்த நிலையில் நேற்றைய தினம் மழை பெய்துள்ளதுடன் சில இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்தும் வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *