யாழில் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

தற்போது புற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இதில் இலங்கையை பொருத்தளவில் யாழ் மாவட்டத்திலேயே அதிகளவான புற்று நோயாளர்கள் இனங்காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த வருடம் யாழ் மாவட்டத்தில் 776 பேர் புற்று நோயாள் பாதிக்கப்பட்டு 71 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ் போதனா வைத்திய சாலைக்கு பல புற்று நோயாளர்கள் வருகை தருவதாக வைத்தியகலாநிதி யமுனானந்தா தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்திலேயே புற்று நோயினை கண்டரிந்து அதற்கான உரிய சிகிச்சைகளை பெற்று கொள்வதன் மூலம் குணப்படுத்த முடியும் என மேலும் தெரிவித்துள்ளார்.

பெண்களும் ஆண்களும் புற்று நோய் தொடர்பில்
விழிப்புடன் இருக்க வேண்டியது மிக அவசியம் என தெரிவித்துள்ளார்.

ஆரோக்கியமான உணவு பழக்க வழக.கங்களை மேற்கொள்வதன் மூலம் புற்று நோயை தடுக்கலாம் என மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *