திருகோணமலை மாவட்ட நீதிபதி எம். கணேஷ்ராஜா மேல் நீதிமன்ற நீதிபதியாகிறார்

இதுவரை காலமும் திருகோணமலை மாவட்ட நீதிபதியாக இருந்து வரும் திரு எம். கணேஷ்ராஜா அவர்கள் மேல் நீதிமன்ற நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட நீதிபதியாக இருந்த திரு மாணிக்கவாசகர் கணேசராஜா அவர்கள் சர்வதேச மனித உரிமைகள் விருதினை பெறுவதற்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அத்துடன் மூன்றுக்கும் மேற்பட்ட சர்வதேச மனித உரிமை விருதுகளையும் அவர் பெற்றிருக்கிறார்.

குறிப்பாக சர்வதேச நீதியரசர்கள் ஆணைக் குழுவினால் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்டு வரும்”மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் சிறந்த பங்களிப்பிற்காக” என்ற விருதினையும் பெற்றுள்ளார்.

இத்தனை விருதுகளையும் தன்னகத்தே கொண்ட திரு மாணிக்கவாசகர் கணேசராஜா அவர்கள் இப்போது மேல்நீதிமன்ற நீதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *