மும்பை எதிர் ராஜஸ்தான்|ராஜஸ்தான் 9 விக்கெட்டுக்களால் வெற்றி

IPL தொடரின் இன்றைய 38 ஆவது போட்டியில் , ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, மும்பை இண்டியன்ஸ் அணியை 8 பந்துகள் மீதமிருக்க 9விக்கெட்டுக்களால்  வெற்றிபெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி துடுப்பெடுத்தாடிய மும்பை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களை எடுத்தது.
ஆகக்கூடுதலாக Tilak Varma , 45 பந்துகளில் 65 ஓட்டங்களை எடுத்தார்.
பந்துவீச்சில் ராஜஸ்தான் அணியின்  Sandeep Sharma, நான்கு ஓவர்கள் பந்து வீசி 18 ஓட்டங்களை மாத்திரமே கொடுத்து 5விக்கெட்டுக்களை எடுத்திருந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, 19 வது ஓவரின் நான்காவது பந்து வீச்சின்போது 1 விக்கெட்டை மாத்திரமே இழந்து 183 ஓட்டங்களை எடுத்து வெற்றியைப் பதிவு செய்தது.ராஜஸ்தான் ரோயலின் அணி சார்பில் ஆகக்கூடுதலாக Yashasvi Jaiswal, 60 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 104 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
ஆட்டத்தின் ஆட்ட நாயகனாக பந்துவீச்சில்  ஐந்து விக்கெட்டுக்கள் எடுத்து அசத்திய Sandeep Sharma தெரிவுசெய்யப்பட்டார்.

அதன்படி ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தொடர்ந்தும் அணி தர வரிசையில் முதல் நிலையை தக்க வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *