போரின் சாட்சியம் நூல் சுவிற்சலாந்தின் லுசேனில் வெளியாகிறது


ஈழநாதம் அலுவலக பத்திரிகையாளராக பணியாற்றிய சுரேன் கார்த்திகேயனின் போரின் சாட்சியம் என்ற நூல் வரும் மே மாதம் 12 ம் திகதி சுவிற்சலாந்தில் லுசேனில்(Luzern) வெளியாகிறது.
இறுதி போரின் பல்வேறு சாட்சியங்களைப் பதிவு செய்யும் பல புகைப்படங்களைத் தாங்கியதான ஒரு ஆவணமாக இந்த போரின் சாட்சியம் என்ற நூல் வெளியாகவிருக்கிறது. போரின் இறுதிக்கு கட்டம் வரை அங்கு பயணித்த ஒரு ஊடகவியலாளனின் பதிவாக இந்த நூல் அமையவிருக்கிறது.
இந்த நூல் புலம்பெயர்ந்த மக்கள் வாழும் பல நாடுகளில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சுவிஸில் இடம்பெறவுள்ள நிகழ்ச்சி பற்றிய மேலதிக பதிவை கீழே காணவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *