லக்னோவ் அணி சென்னையை மீண்டும் வென்றது

IPL 2024 தொடரின் இன்றைய போட்டியில் லக்னோவ் அணி சென்னை அணியை மீண்டும் வென்றது.
தொடரின் 39 வது போட்டியாக இடம்பெற்ற இன்றைய போட்டி, சென்னை சிதம்பரம் மைதானத்தில் இடம்பெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற Lucknow Super Giants அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
அதன்படி துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய Chennai Super Kings அணி நான்கு விக்கெட்டுக்களை இழந்து 210 ஓட்டங்களை எடுத்தது.
ஆட்டத்தில் சென்னை அணிக்காக அணித்தலைவர் Ruturaj Gaikwad ஆட்டமிழக்காமல் 60 பந்துகளில் 108 ஓட்டக்களைக்குவித்தார். இது அவரது தலைமைத்துவத்தில் அடுத்த முதல் சதம்.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய லக்னோவ் அணி மூன்று பந்துகள் மீதமிருக்க, நான்கு விக்கெட்டுக்களை இழந்து 213 ஓட்டங்களை எடுத்து 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. ஆட்டத்தில் அதிகபட்சமாக லக்னோ அணியின் சார்பில் Marcus Stoinis, 63 பந்துகளில் 124 ஓட்டங்களை நிறைவு வரை ஆட்டமிழக்காமல் எடுத்து ,அணியை வெற்றிப்பாதை நோக்கி அழைத்துச்சென்றார்.
அதன்படி Marcus Stoinis ஆட்டநாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்

.
இன்றைய போட்டிகளின் நிறைவில் அணித்தர வரிசையில் சென்னை 5ம் இடத்துக்கு தள்ளப்பட , லக்னோ அணி 4ம் இடத்துக்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *