Manchester City 5 – 1 கோல்கள் கணக்கில் அபார வெற்றி

Premier League தொடரின் இன்றைய போட்டியொன்றில் Manchester City அணி , Wolverhampton அணிக்கு 5 கோல்களை அடித்து அபார வெற்றியை பதிவுசெய்துள்ளது.

போட்டொயின் ஆரம்பம் முதலை அபார ஆட்டத்தை ஆடிய Manchester City அணி 12 நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. அணியில் இன்று மட்டும் 4 கோல்களை தனித்து அடித்த E. Haaland , முதல் கோலை 12 நிமிடத்தில் அடிக்க ஆரம்பித்து பின்னர் , 35 வது நிமிடம் , முதற்பாதியாட்டத்தில் வழங்கப்பட்ட நேரத்தில் 3வது நிமிடம், மற்றும் 54 வது நிமிடம் ஆகிய நேரங்களில் தொடர்ந்து கோல்களை அடித்திருந்தார்.

Wolverhampton அணியின்  வீரர் Hwang , 53 நிமிடத்தில் முதல் கோலை அடித்திருந்தார் எனினும் மேலதிகமாக எந்த கோலைகளையும் தொடர்ந்து அந்த அணியால் அடிக்க முடியவில்லை.
போட்டியின் நிறைவான நிமிடங்களை நெருங்கும் 85 வது நிமிடத்தில் Manchester City அணி மேலும் ஒரு கோலை அடித்து பெரு  வெற்றியை பதிவு செய்தது.  Manchester city அணியின் வீரர் Álvarez இந்த கோலை சிறப்பாகவே அடித்தார்.
அதன்படி நிறைவில் Manchester City அணி 5 – 1 என்ற கோல் கணக்கில் பெரு வெற்றியை பதிவு செய்தது.
இதுவரை 35 போட்டிகளில் விளையாடியுள்ள Manchester City அணி 82 புள்ளிகளைப் பெற்று அணித்தர வரிசையில் 2 ம் இடத்தை தக்கவைத்துள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *