மும்பை இன்டியன்ஸ் இன்று வென்றது

IPL போட்டிகளின் இன்றைய போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணி ஒன்பது ஓட்டங்களால் பஞ்சாப் கிங்க்ஸ் அணியை தோற்கடித்து வெற்றிபெற்றுள்ளது.


மகாராஜா யாதவீந்திரசிங் மைதானத்தில் இடம்பெற்ற இன்றைய 33 வது போட்டியில் இந்த வெற்றியை மும்பை இன்டியன்ஸ் அணி பதிவுசெய்துள்ளது.


முன்னதாக நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி
20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 192 ஓட்டங்களை எடுத்தது.


மும்பை அணி சார்பில் சூர்யகுமார் யாதேவ் (Suryakumar Yadav) 53 பந்துகளில் 78 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

தொடர்ந்து துடுப்பெடுத்தாட களமிறங்கிய பஞ்சாப் அணி 19.1 ஓவர்களில் 183 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
ஆட்டத்தில் அஷூரோஸ் (Ashutosh Sharma) 28 பந்துகளில் 68 ஓட்டங்களை குவித்திருந்தார்.
இருப்பினும் விக்கெட்டுக்களை விரைவாக இழந்த கிங்ஸ் 11 பஞ்சாப் அணி 9 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
ஆட்டத்தின் ஆட்ட நாயகனாக, 4 ஓவர்கள் பந்து வீசி 21ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி  மும்பை  அணியின் ஜாஸ்பிறிற் பும்ரா (Jasprit  Bumrah) அறிவிக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *