சுயஸ் கால்வாயின் ஊடாக மீண்டும் பயணித்தது எவர் கிவன் – இம்முறை – மாட்டிக்கொள்ளவில்லை!

ஒரு சில மாதங்களுக்கு முன்னர் உலக வர்த்தகத்துக்கும், பொருளாதாரத்துக்கும் சுயஸ் கால்வாயின் முக்கியம் பற்றி உணர்த்துவதற்காகவோ என்னவோ அக்கால்வாயில் மாட்டிக்கொண்டது இந்த “எவர் கிவன்” சரக்குக் கப்பல். ஒரு வழியாக அங்கிருந்து அகற்றப்பட்டு எகிப்தின் அரசிடம் மாட்டிக்கொண்டது. அதிலிருந்தும், விடுபட்டுச் ஜூலை மாதத்தில் தான் சுதந்திரமாகியது இந்த 400 மீற்றர் சரக்குக் கப்பல்.

அதன் பின்னர் ரொட்டடாம் துறைமுகத்துக்கு ஜூலை மாத இறுதியில் போய்ச் சேர்ந்தது. அதன் பின்னர் மீண்டும் தனது பயணத்தில் அதே சுயஸ் கால்வாயைக் கடந்திருக்கிறது வெற்றிகரமாக.

இம்முறை எவர் கிவனுக்கு வழி ஒழுங்கு செய்ய இரண்டு வழிகாட்டல் கப்பல்கள் மூலமாக உதவியது சுயஸ் கால்வாய் போக்குவரத்து அதிகாரம்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *