எண்ணங்கள் எழுத்தால் ஒளியேற்றும்

எழுத்து என்பது உயர்ந்த வரம்

எழுதுவோர் மட்டும் அறிந்த சுகம்

கழுத்து வலியையும் போக்கும்

காலத்தின் பழியையும் நீக்கும்

 உழுத்து போன நினைவுகளும் பூக்கும்

 உலகையே திரும்பி பார்க்க வைத்து அறிவுப் பசியையும் போக்கும்

படைப்பின் ரகசிய நிகழ்வு

பல மன உடைப்பின் மருத்துவக் குறிப்பு

விரும்பியோர் அர்சனை செய்வர்

விரும்பாதோர் விமர்சனம் செய்வர்

ஆனாலும் எழுதுவோர் ஓய்வதில்லை

எண்ணங்கள் ஒளியேற்றாமல் போவதில்லை🔥

எழுதுவது: சுப பாலா