கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் ரவீந்திரனுக்கு யாழ்விருது

சமயத்துக்கும் சமூகத்துக்கும் பணியாற்றும் மாண்புடையோருக்கு வழங்கப்படும் யாழ்விருது இந்த வருடம் யாழ்ப்பாணம் கல்வியியற் கல்லூரி விரிவுரையாளரும் சமூகப்பணியாளருமாகிய திரு ஆ.ரவீந்திரன் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

யாழ்மாநகரசபை சைவம் விவகாரக்ககுழு வருடாவருடம் நல்லக்குமரன் இதழ் வெளியீடு செய்து வரும் நாளில் இந்த யாழ்விருதும் சமூக சமயப்பணியாளருக்கு வழங்கிவருவது வழமையாகும்.அந்த வகையில் நல்லைக்குமரன் மலரின் 29 இதழும் வெளியீடு செய்யப்பட்டிருந்தது.

தொடர்ந்து வாழ்வகம் விழிப்புலனற்றோர் இல்லத்தில் மாணவனாக இருந்து இன்று அதன் தலைவராக வழிநடாத்திவருபவரும் யாழ் கல்வியியற் கல்லூரி விரிவுரையாளருமாகிய திரு ரவீந்திரன் அவர்களுக்கு அவரின் மனம் தளராத சமூகப்பணிக்காக இந்த யாழ் விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.