Doctor.கதிரவேற்பிள்ளை அவர்களின் நினைவில் அஞ்சலி நிகழ்வு

மருத்துவப்பணியாலும் சமூக சேவைகளாலும் மக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம்பிடித்த முன்னாள் மாவட்ட வைத்திய அதிகாரி டொக்டர் கதிரைவேற்பிள்ளை அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு கார்த்திகை மாதம் 13 ம்தி சனிக்கிழமை இடம்பெற்றது.
இணையவழி நிகழ்வாக இடம்பெறும் இந்த நிகழ்வு, நாளை இலங்கை நேரம் 5 30 க்கும் சரியாக ஆரம்பிக்கும் என நிகழ்வின் ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
மந்திகை வைத்தியசாலையில் இருந்து ஆரம்பிக்கும் இந்த நிகழ்வில் தாயகத்திலிருந்து புலம்பெயர் நாடுகள் வரை பரந்திருக்கும் பலரும் தங்கள் டொக்டர் கதிரவேற்பிள்ளை அவர்களுடனான நினைவுகளையும் அவரின் ஆளுமைத்திறன்களையும் பகிரும் களமாக அமைந்திருந்தது. .

கோவிட்19 கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக இருக்கும் காலத்தில் பலரும் நேரடியாக டொக்டர் அவர்களுக்கு இறுதிமரியாதையை வழங்க முடியாததிருந்த நிலையில் இந்த நிகழ்வில் பலரும் ஆர்வத்துடன் பங்குகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.டொக்டர் கதிரவேற்பிள்ளை அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்கள்..

ஆளணி குறைபாடுகள்,பொருளாதார தடைகள், தொடர் துயரங்கள்,சவால்கள் நிறைந்த போரின் இடர்காலத்தில் சமூகத்தோடு சமூகமாக இருந்து தன் சேவையை மக்களுக்காகவே அர்ப்பணித்த ஒரு பெருமகனை ஒருநாளில் சில மணிநேரங்கள் எல்லோரும் கலந்துகொண்டு அந்த நிகழ்வை சிறப்பாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது