கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி

யாழ் இந்துக்கல்லூரியின் நவீனமயயப்படுத்தப்பட்டு தரமுயர்த்தப்பட்ட மைதானத்தில் நடைபெற்ற முதல் துடுப்பெடுத்தாட்டப்போட்டியில் கொழும்பு றோயல்கல்லூரி அணி வெற்றிபெற்றது.

நட்புரீதியான போட்டியாக இடம்பெற்ற இந்தப்போட்டி யாழ் இந்துகல்லூரிக்கும் றோயல் கல்லூரிக்கும் இடையில் மட்டுப்படுத்தப்பட்ட 30ஓவர்கள் கொண்டதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ் இந்துக்கல்லூரி அணி களத்தடுப்பில் ஈடுபடத்தீர்மானிக்க முதலில் துடுப்பெடுத்தாடிய றோயல் கல்லூரி அணி நிர்ணயிக்கப்பட்ட 30 ஒவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 228 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ் இந்துக்கல்லூரி அணி 30 ஓவர்களில் 150 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து தோல்வியை தழுவியது.

போட்டியின் ஆட்டநாயகனாக றோயல் கல்லூரியின் உமுது வீரசேகர தெரிவுசெய்யப்பட்டார். அதுமட்டுமல்லாமல் வளர்ந்து வரும் சிறந்த வீரராக றோயல் கல்லூரி அணி மல்லவராச்சியும் தெரிவு செய்யப்பட்டார்.

யாழ் இந்துக்கல்லூரி அணி சார்பில் போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக தரணீதரனும் சிறந்த பந்து வீச்சாளராக கஜாநாத்தும் சிறந்த களத்தடுப்பாளராக கோமைந்தனும் தெரிவு செய்யப்பட்டனர்.

நேற்றுமுன்தினம் நவீனமயப்படுத்த சிறப்பான நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டு அங்குரார்ப்பணம் செய்த திடல் மைதானத்தில் இடம்பெற்ற முதல் போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.