முப்படையமைத்து எத்தடையுமுடைத்த எம் தலைவன்

சீருடையில் கூட சின்னத்தை பதித்தாய்
சிங்கார வேலன் போல் வண்ணத்தை அளித்தாய்
முப்படையையும் எண்ணம் போல் அமைத்தாய்
எத்தடையையும் எண்ணும் போதே உடைத்தாய்🔥

பெயரைக் கேட்டாலே பேதி கொள்ள வைத்தாய்
சாதிமுறை அனைத்துக்கும் நீதி ஒன்றெனஉரைத்தாய்
போதி பெளத்திற்கு புத்தி வர செய்தாய்
ஆதித் தமிழுக்கு பக்தி வர உழைத்தாய்🔥

தலைவன் என மெத்தை வாங்காது
முட்களுடன் சிரித்தாய்
முதல்வன் என முறுக்கி கொள்ளாது
சிறுவனைப் போல் சிலிர்தாய்
சிறு சிறு உளிகொண்டு செதுக்கி- பாரெல்லாம் தமிழனுக்கு தாயாகி இனித்தாய்💞

ஒழுக்கம் என்பதை ஓதி வள்ளுவமானாய்
பழக்கம் என்பதை போற்றி வாழ்க்கையுமானாய்
இயக்கமதை இதயமாக்கி இமயமுமானாய்
இவ்வுலகில் எமக்கு நீயே இறைவனுமானாய்🔥

எழுதுவது : சுப பாலா