மகிழ்ச்சி

நம் உழைப்பும்
சொற்களும் நமக்கும் பிறருக்கும்
பயனுள்ளதாக இருந்தாலே
மகிழ்ச்சி தானாக வரும்!

மகிழ்ச்சி வெளியில் இருப்பதாக
நாம் தவறாக எண்ணுகிறோம்
அது நம் மனதில்
தான் இருக்கிறது!!

நேற்று நடந்தவற்றை நம்மால்
மாற்ற முடியாது
நாளை
நடப்பதை தடுக்க முடியாது!

இன்றைய பொழுதில்
இக்கணத்தில் மகிழ்ச்சியாக
வாழ்வோம்
அது தான்
எல்லா துன்பங்களுக்கும்
ஒரே தீர்வு!

புகழையும்
இகழையும் சமமாக கருதும் போது தான்
மன அமைதியுடன்
வாழ முடியும்!

நம் மகிழ்ச்சியை அடுத்தவர்களிடம்
தேடினால் நமக்கு தனிமையை
மட்டுமே தரும்!

நமக்கான மகிழ்ச்சியை
பிறரிடம் தேடாமல் நமக்குள் தேடினால் தான் மகிழ்ச்சி கிடைக்கும்!

உண்மையான மகிழ்ச்சி என்பது யாரையும்
கவலையடைய
செய்யாதிருப்பதாகும்!

கவலைகள் வரும் இடம்
எது என்று தெரியாது ஆனால்
மகிழ்ச்சியும் புன்னகையும்
நம்மிடம் தான் இருக்கிறது! ...

எழுதுவது : விஜயலட்சுமி