அன்பு மழை

திருமணம் எனும் பந்தத்தில் இணைந்து!

திகட்டாத அன்பைத் தரும் என்னவனே!

எவ்வளவோ செல்லமான சண்டைகள் வந்தாலும்!

அதை உன் புன்னகையால் சமாளிப்பவனே!

என் மீது எனக்குள்ள நம்பிக்கையை விட!

அதிகம் நம்பிக்கை உடையவன் நீதான்!

கல்வி எனும் எட்டாக் கனியை!

சுவைக்க வைத்தவன் நீ தான்!

தாய் தந்தையை உன்னில் கண்டேன்!

உமையொருபாகம் உடைய ஈசனைப் போல்!

உன்னில் என்னை ஒரு பாதியாக்கினாய்!

அள்ள அள்ளக் குறையாத அன்பை!

அளித்த அன்னை போன்றவனே!

அன்புக் கடலில் மூழ்கிக் தவிக்கிறேன்!

நனைகிறேன் என்னவெனில் அன்பு மழையில்!

எழுதுவது
ந.ராஜேஸ்வரி
ஆய்வியல் நிறைஞர்
அரசு கலைக் கல்லூரி தன்னாட்சி
கரூர் 5.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *