காதல்

ஆழ்மனதில்
அரும்பும் காதல்
அழகானது !
குறும்பானது!
கரும்பாய் இனிக்கும் !
சில சமயம்
இரும்பாய் கணக்கும் !

உண்பதிலும்
உறக்கத்திலும்
அந்த முகம்
மட்டுமே தெரியும் !

இன்பத்திலும்
துன்பத்திலும்
அருகமர்ந்து தோள் சாய
ஆசைக் கொள்ளும் !

மனம் வந்த காதலை சொல்லி முடிப்பதற்குள்
மனதுக்குள் ஏனோ
பேரிடி முழக்கம் எழும் !
சொல்லி முடித்த பின்
கொள்ளை ஆசை
மனதில் வந்து

ஏதோ ஒரு உணர்வு
ஏதோ ஒரு தாகம்
ஏதோ ஒரு வேகம்
ஏதோ ஒரு மோகம்

இன்ப வலி தந்து
ஏக்கத்தில்
தூக்கமின்றி அலைய செய்யும் !

எப்படியாவது பார்க்க வேண்டுமென
ஏங்கி தவிக்கும் !
எங்கிருந்தாலும் பார்ப்பதாகவே கண்கள் தூக்கம் தொலைக்கும் !

ஊரே கூடியிருந்தாலும்
கண்களில் தெரிவதென்னவோ
அந்த ஒற்றை முகமே !

உறவெல்லாம் ஒன்றாய் நின்றாலும்
உறவில்லா அந்த முகமொன்றே
உறவென எண்ணும் !

தனிமையில் சுகம் தேடும் !
தனிமையின் இன்பம் சுவைக்கும் !
தனிமையே தவமென எண்ணி
தனக்குள்ளே வாழ்ந்து தவிக்கும் !

தினமொரு முறை தூக்கத்தில்
திருமணம் நடக்கும்!
தினமொரு குழந்தை பிறந்து
தூளியில் தத்தி தவழும் !

காண்பதற்கு
காரணம் தேடும் !
கண்டவுடன் கண்கள் படபடக்கும் !
பேச நினைத்த வார்த்தைகள் மறந்து போகும் !
காரணமின்றி மெய்சிலிர்க்கும் !
கவிழ்ந்த தலை நிமிர்ந்து பார்ப்பதற்குள்

காலம் கடந்திருக்கும்
காணும் நேரம் முடிந்திருக்கும் !

விடை பெற நினைக்கையிலே ஏனோ கண்கள் கண்ணீர் சொட்டும் !

தானாய் சோகம் வரும் !
வீணாய் கோபம்
வரும் !

தேனாய் இனிக்கும்
சில நேரம் !
வேம்பாய் கசக்கும்
மறு நேரம் !

இரண்டும் கானல்
நீரே என்றறிந்த
இதயம்
இரண்டுக்கும்
ஏங்கி தவிக்கும் !

உண்மை காதல் உடைந்து போவதில்லை !
உயிரில் கலந்த காதல் களைந்து போவதில்லை !

உண்மையாய் காதலிக்க உள்ளத்தில்
துணிவு வேண்டும் !

உயிருள்ளவரை
காதல்
நிலைத்திருக்க
காதலில்
உண்மை வேண்டும்!

வாழ்க காதல் ❤️

எழுதுவது ; பி.ஆரோக்கிய செல்வி ,M. A.B.Ed .,
மாவட்ட முதன்மை பயிற்றுநர் ,
ஊரக வளர்ச்சி துறை ,
கடலூர் மாவட்டம் .