பார்வையும் பதிவும்

ஹைக்கூ கவிதைகள்

கவர்ச்சி மார்பில்
புனித பார்வை படர்கிறது
பால் குடிக்குது குழந்தை..!

அழுக்கு அந்தியை துவைத்து
வெளிச்ச விடியலாக்குது
கூலி வாங்காத கடல்..!

குளத்தில் எறிந்த கல்லை
உணவென்று கடிக்கிறது
பட்டினியால் வாடும் மீன்கள்.!

ஏழைகளின் முதுகொடிக்கும்
செல்வங்களுக்கு தோள்கொடுக்கும்
பச்சோந்தி சட்டங்கள்..!

சட்டப் புத்தகத்தின் வார்த்தைகள்
அடித்து வெட்டப்பட்டது
பணக்காரர்களின் வரவேற்பறையில்…

கல்வி நிலையங்களில்
கண்காணிப்பு கேமரா வையுங்கள்
கற்புக்கு உத்தரவாதமில்லை..!

ராணுவத்தினர் மக்களை சுட்டார்கள்
ராணுவத்தினர் விபத்தில் மாண்டார்கள்
இயற்கையின் நீதி தராசு..!

காவல் நிலையத்தை கடக்கும் போது
ஆவிகளின் அலறல் கேட்கிறது
லாக்கப் மரணம்..!

வாட்ஸ்அப் ஹாய்
வாந்தியில் முடிந்தது
நவீனக் காதல்..!

கவிஞர் விஜய் சேசுலா.