என் உயிரே…

என்னை
பேச வைத்ததும்
நீ தான்

என் மேல்
அதிகம் பாசம்
வைத்ததும்
நீ தான்

என்னை
வற்புறுத்தியதும்
நீ தான்

என்னை புரிந்து
கொண்டதும்
நீ தான்

என் மனதில்
வந்ததும்
நீ தான்

என்னிடம் பிரியமாய்
இருப்பதும்
நீ தான்

என் வாழ்க்கையை
வசந்தமாக்கியதும்
நீ தான்

என்றும்
எனக்கு
ஆதரவளிப்பதும்
நீ தான்

என்றுமே
என்னை பிரிவதில்லை
என்றதும்
நீ தான்

என்னிடம்
அடிக்கடி
சண்டையிடுவதும்
நீ தான்

என்னுடன்
வெயிலாகவும்
மழையாகவும்
பயணிப்பவன்
நீ தான்

உன் நிழலில்
என்னை
இளைப்பாற
வைப்பவனும்
நீ தான்

என்னுடன்
கை கோர்த்து
உலா வருபவனூம்
நீ தான்

என்னை
அன்பு மழையில்
நனைப்பவனும்
நீ தான்

என் மன
மாளிகையில்
குடியிருப்பவனும்
நீ தான்

எப்போதும்
என்னிடம்.
உயிராய்
இருப்பதும்
நீ தான்
என்னவனே!

என் உயிரே
உன்னை பிரிந்தால்
இருப்பேனா நான்
உயிருடன்!! .....

எழுதுவது :விஜயலட்சுமி