திருநங்கை

உன்னை பார்த்ததும்
திரு திரு வென
நகைக்கும்
சில திருந்தா
ஜென்மைகளை
மனித ஜென்மத்தில்
சேர்த்தாமல்
எந்த ஜென்மத்திலும்
மன்னிகாமல்
தூர கடந்துவிடு
தூக்கி கடசி விடு..
உன் புன்(நகையை)
மதிக்கும்
நபர்களுக்கு
புன்னகையை
வீசிவிட்டு வா
உன் நடையை
விமர்சிப்பவர்கள்
வித்தியாசமான
பார்வை யைப்
வீசி செல்…
அவர்களுக்கு தெரியுமா
அர்த்தமற்ற
அறமற்ற
ஈன செய்கையை
எவன் செய்தாலும்
உன்னோடு கைகோர்க்க
உனக்குள் இருக்கும்
சிவனுக்கு தெரியும்..
ஏனென்றால்
அந்த சிவனும்
நீயும் ஒரு ஜாதி..
ஆம்
அந்த அர்த்தநாரீஸ்வரர்
ஆண்பாதி
பெண்மீதி
இந்த அர்த்தம்
தெரியாதவன்
அனர்த்தம் ஆகிறான்..
உன் அர்த்தம்
தெரிந்தவன்
மனிதன் ஆகிறான்…
நீ ஒரு தெய்வீக
நங்கை
ஆகையால்
திருநங்கை………