சிறப்புடன் நடந்தேறிய SOAS முத்தமிழ் விழா 2022

இலண்டன் பல்கலைக்கழகம் SOAS ல் தமிழ்த்துறையை மீள உருவாக்கத்திற்கான நிதிதிரட்டும் பெருமுயற்சியின் தொடர்ச்சியாக, முத்தமிழ் விழா 2022 கடந்த ஞாயிற்றுக்கிழமை பெப்பிரவரி மாதம் 20 ம் திகதி 2022 அன்று மிக விமரிசையாக நடந்தேறியது.

சிறப்பு மேடை நிகழ்ச்சிகளின் தொகுப்பாக பலரைக்கவரும் வண்ணம் சிறப்புடன் நிகழ்வு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இந்த முத்தமிழ் விழா 2022 இல் தமிழ் ஆர்வலர்கள், பிரித்தானிய அரசியல் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும்  கலை இரசிகர்கள் என பலரும் பங்குபற்றி இருந்தார்கள். 

முத்தமிழ் விழாக்களின் சிறப்பம்சத்தைப்போலவே இங்கும் இயல், இசை, நாடகம் எனப் பல சிறப்பான நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. பிரிட்டனின் பல பாகங்களிலும் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கும் தமிழ்ப்பாடசாலைகளிலிருந்து நாளைய தலைமுறைகளால் அவர்களின் ஆசிரியர்களினால் நெறிப்படுத்தப்பட்ட அரங்க நிகழ்வுகள் இங்கே அரங்கேறின.

படங்கள்:Baba Luxy – 🙏🏻 நன்றி

குறிப்பாக இலண்டன் தமிழ் நிலைய தமிழ்ப்பாடசாலை, கரோ தமிழ் பாடசாலை,லிவர்பூல் தமிழ் கல்விக்கூடம்,அல்பெர்ட்டன் OFAAL தமிழ் பாடசாலை, சட்பறி தமிழ் பாடசாலை,நாட்டியச்சேத்திரா நடனப் பாடசாலை ஆகிய பாடசாலைகளைச்சேர்ந்த சிறார்களின் நிகழ்வுகள் மேடையை அலங்கரித்தன.

மேலும் இந்த நிகழ்வின் மூலம் தமிழ்த்துறைக்கு திரட்டப்பட்ட £6100 நிதி தமிழ்த்துறை தலைமை ஒருங்கிணைப்பாளரிடம் அரங்கில் வைத்து காசோலை மூலமாக கையளிக்கப்பட்டது.

அத்துடன் குறித்த நிகழ்வை மிகச்சிறப்புடன்
திருமதி அஞ்சு ராமதாஸ் மற்றும்
செல்வி அர்ச்சனா இலங்கைநாதன் ஆகியோர் தொகுத்து வழங்கியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.