12 பேருக்கு ஒரேநாளில் மரண தண்டனை|நடந்தது எங்கே தெரியுமா?

ஒரே நாளில் 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியிருக்கிறது ஈரான்.

கடந்த ஜூன் மாதம் 6ம் தேதியே இது நடைபெற்றிருக்கிறது. குறித்த இந்த நாளில் ஒரு பெண் உட்பட 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த இந்த விடயத்தை அந்நாட்டின் மனித உரிமைகள் அமைப்பு மட்டுமே இதை வெளியுலகத்துக்கு வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. இது குறித்து ஈரானிய அரசாங்கமோ அல்லது , உள்ளூர் ஊடகங்களோ எந்தவித தகவல்களையும் குறிப்பிட்டிருக்கவில்லை என்பது பலரை சந்தேகக்கண் கொண்டு பார்க்க வைத்துள்ளது.

இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 12 பேரில், 6 பேர் போதைப் பொருள் கடத்தல்களுக்காகவும், 6 பேர் கொலைக்குற்றங்களுக்காகவும் தண்டிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது.

நோர்வேயை தளமாகக் கொண்ட ஈரானிய மனித உரிமைகள் அமைப்பே இந்த விடயத்தை ஊடகங்களுக்கு சொல்லியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

செய்திகள் எழுதுவது : யோதிகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *