பிரேசில் வீழ்ந்தது| குரேஷியா அரையிறுதிக்குள் நுழைந்தது

கட்டார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்ட அரை இறுதிப் போட்டிக்கு குரோஷியா  தகுதி பெற்றுள்ளது. எதிர்பார்க்கப்பட்ட பலமான பிரேசில் அணி பெனல்டி முறையில்  3:2 கோல் விகிதத்தில் தோற்று  அரை இறுதி வாய்ப்பை இழந்தது.

இன்று உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் இன்றைய முதல் கால் இறுதிப் போட்டியில் முழுநேர 90 நிமிட ஆட்ட நேரத்தில் எந்த அணியும் கோல்களை அடிக்கவில்லை. . 

தொடர்ந்து வழங்கப்பட்ட மேலதிக 30 நிமிடத்தில் இடைவேளைக்கு முன் அணித்தலைவர் நேய்மார் அபாரமாக கோல் ஒன்றினை அடித்தார்

இடைவேளைக்குப்பின் 117 ஆவது நிமிடத்தில் நிறைவை அண்மிக்க முன் குரோஷியாவின்  புரூனோ பெட்கோவிச் அடித்த மிகச்சிறப்பான கோல் போட்டியை மீண்டும் சமப்படுத்தியது.

நிறைவில் வழங்கப்பட்ட பனால்டி வாய்ப்புகளில் குரோஷியா 3:2 விகிதத்தில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

இன்றைய போட்டியில் நெய்மர் அடித்த கோல் சர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்த பேலேயின் சாதனையையும் சமப்படுத்தியிருந்தது.

பேலே 92 போட்களில் 77 கோல்களை நெய்மார் 124 போட்டிகளில் அடித்து சமப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *