ஜனாதிபதி ரணிலுக்கு ஆலோசகராக இருந்த அஷு மாரசிங்கே நாயொன்றுடன் தகாத உறவு வைத்திருந்த படங்கள் வெளியாகின.

சிறீலங்காவின் ஜனாதிபதியின் ஆலோசகராக இருந்த பேராசிரியல் அஷு மாரசிங்கே நாய் ஒன்றுடல் காமச்செயலில் ஈடுபட்டிருந்த படங்கள் வெளியாகியிருக்கின்றன. அந்தப் படங்கள் நாடெங்கும் ஏற்படுத்திய அருவருப்பை எதிர்கொள்ள முடியாமல் அவர் டிசம்பர் 23 ம் திகதி ஜனாதிபதியின் ஆலோசகர் என்ற பதவியிலிருந்து விலகியதாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. 

2017 – 2020 ம் ஆண்டுவரை ஐக்கிய தேசியக் கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினராக இருந்த 51 வயதான மாரசிங்கேயின் அருவருப்பான படங்களை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திரா பகிரங்கப்படுத்தினார். நாயுடன் மாரசிங்கே பாலியல் உறவுகொள்ளும் அப்படங்களை மாரசிங்கேயின் காதலியாக இருந்த ஆதர்ஷா கரந்தன என்ற இளம் பெண்ணொருவர் எடுத்ததாக பிரேமச்சந்திரா குறிப்பிட்டிருந்தார்.

பேஸ்புக்கில் சுமார் 2 வருடங்களுக்கு முன்னர் மாரசிங்கேயுடன் நண்பியாகிய கரந்தன அவருடன் ஒரே வீட்டில் வாழ்ந்துவந்தார். அவர் வளர்த்து வந்த நாயின் நடப்புகள் வித்தியாசமாகியதால் சந்தேகப்பட்டுக் கண்காணித்ததில் மாரசிங்கே அந்த நாயுடன் உறவுகொள்வதை அவர் கண்டறிந்தார். அதைத் தனது கைப்பேசி மூலம் படமெடுத்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். 

கரந்தன எடுத்த படங்களைப் பிரேமச்சந்திரா வெளியிடச் சில மணிகளுக்கு முன்னரே மாரசிங்கே தனது பதவியிலிருந்து விலகிவிட்டார். மாரசிங்கேயின் காதலியாக இருந்த சமயத்தில் அவர் தன்னை வன்முறைக்கு உட்படுத்தியதாகவும் விபரங்களைத் தான் ரணில் விக்கிரமசிங்கே மற்றும் அவருடைய மனைவியிடம் தெரியப்படுத்தியதாகவும் கரந்தன குறிப்பிட்டார். அதுபற்றி எவரும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *