தமிழ் சிறை கைதிகள் இருவர் விடுதலை..!

200 வருட சிறைதண்டனை கைதி ஒருவரும் ,ஆயுள் தண்டனை கைதி ஒருவரும் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

1996 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கி மீதான குண்டு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

செல்லையா நவரட்ணம் என்ற குறித்த அரசியல் கைதியுடன் ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த சண்முகரட்ணம் சண்முகராஜா என்ற தமிழ் அரசியல் கைதியும் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையில் இவர்களது நன்னடத்தையை கருத்திற் கொண்டு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்கள் இருவரும் கடந்த 18ம் திகதி விடுதலைசெய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *