காடழிப்பில் ஈடுப்பட்ட இருவர் கைது..!

சட்ட விரோதமான முறையில் மாந்தை கிழக்கு பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் காடழிப்பில் ஈடுப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய கைது செய்யப்பட்டுள்ளனர் .

இச்சம்பவத்தில் 68மற்றும் 38 வயதுடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் போது மரம் வெட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.

இவர்கள் மீது அரச காணியை சட்டவிரோதமான முறையில் கைப்பற்றல்,பெறுமதியான மரங்களை வெட்டுதல் போன்ற காரணங்களை முன்வைத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 08,09 ம் திகதிகளில் மாங்குளம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை இவர்கள் இருவரையும் பிணையில் செல்ல அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *