‘மலையக குயில் அசானி’ யின் கீதம் இன்று..!

மலையக குயில் அசானி ,மலையக மண்ணில் இருந்து இந்தியா நோக்கி புறப்பட்டு zee tamil சரிகமப நிகழ்ச்சியில் இன்றைய தினம் கலந்து சிறப்பிக்க உள்ளார்.

திறமைகள் எங்கு இருந்தாலும் வாய்ப்புகள் கட்டாயம் கிடைக்கும். அவ்வாறு தான் அசானிக்கு கிடைத்த ஓர் வாய்ப்பு.

இந்நிகழ்ச்சியில் பல்வேறுப்போட்டியாளர்கள் இருந்தாலும் எமது மலையக மண்ணின் குரலாக ஒலிக்க இருப்பது அசானியின் குரலே.

மலையகம் பல கஷ்டங்களை கண்டுக்கொண்டு இருந்தாலும் அவ்வப்போது இவ்வாறான சின்ன சின்ன சந்தோசங்கள் மலையக மக்களின் மனங்களை மகிழ்ச்சிப்படுத்துகிறது.

பல உள்ளங்கள் பல நாட்கள் தேடிய ஓர் குரல் இன்று வருவதை எண்ணி முழு மலையகமுமே மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி நிற்கிறது.

வாழ்த்துக்கள் ‘மலையக குயில் அசானி’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *