மீண்டும் கொரோனாவா..?

கொரோனா என்ற சொல்லை மறந்து இப்பொழுது தான் கொஞ்சம் நிம்மதி பெரு மூச்சிவிடும் பொழுது. மீண்டு கொரோனா தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை அணியின் வீரர்களான அவிஷ்க பெர்ணாண்டோ,குசல் ஜனித் பெரேரா ஆகிய இருவருக்கும் தான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதே வேளை இலங்கை அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாய
ம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

13போட்டிகள் கொண்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் எதிர்வரும் 30ம் திகதி ஆரம்பமாக இருக்கின்றது.

இதன்படி இலங்கை அணியானது எதிர்வரும் 31ம் திகதி தனது முதலாவது போட்டியில் பங்களாதேஷ் அணியுடன் பலபரீட்சை நடாத்த இருக்கின்றமை குறிப்பிடதக்கது.

இதே வேளை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் இருவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் , ஏனைய வீரர்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுமானால் பங்களாதேஷ் அணியுடனான போட்டியானது இரத்து செய்யப்படும் அல்லது போட்டிகள் பிற்போடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *