சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாளை காலை விண்வெளி வீரர்களுடன் விண்கலம் பயணம்..!

இன்றைய தினம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செலுத்தப்பட இருந்த விண்கலம் இறுதி தருணத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

நாசா மற்றும் ஸ்பேஷ்எக்ஸ் இணைந்து 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப திட்டமிட்டுருந்தனர் எனினும் அது இறுதி தருணத்தில் கைவிடப்பட்டுள்ளது. இந் நிலையில் நாளை காலை 3.27க்கு விண்கலம் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாசாவிற்கான மைக்ரோகிராவிட்டி ஆய்வகத்திற்கு சுழற்சி முறை பணிக்காக அனுப்பப்படும் ஸ்பேஸ்எக்ஸின் 7வது குழுவினர் இவர்களாவர்.இவர்கள் 6 மாத காலம் அளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்து ஆய்வுகளை மேற்கொள்வார்கள் என நாசா தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *