தேசிய அடையாள அட்டை இன்றி இருப்பவர்களுக்கு 2500 ரூபா அபராதமாக அறவிட தீர்மானம்..!

தேசிய அடையாள அட்டை பிரச்சினையை குறுகிய காலத்துக்குள் தீர்ப்பதற்காக 40 வயதிற்கு மேற்பட்ட அடையாள அட்டை இன்றி இருப்பவர்களுக்கு 2500 ரூபா அபராத தொகையை செலுத்திய பின்னரே தேசிய அடையாள அட்டையை பெற முடியும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் உயர்த்தப்பட்ட அபராத தொகையை வழங்க முடியாத குறைந்த வருமானம் பெறும் நபர்களிடமிருந்து மாத்திரம் முன்னர் அறவிடப்படும் தொகையான 250 ரூபாவை அறவிட ஆட்பதிவு திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *