தொடரும் மழையுடனான வானிலை…!

கடந்த சில மாதங்களாக கடுமையான வறட்சி நிலவியது. இதன்காரணமாக பலர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தனர். இதனிடைய இந்த வாரம் அளவில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக களுகங்கை நில்வலா கங்கை என்பன பெருக்கெடுத்து ஓடுகின்றன. இதனால் தாழ் நிழங்கள் யாவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதே வேளை குகுளே கங்கையின் இரண்டு வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

இரத்தினபுரி , புளத்சிங்கள போன்ற பிரதேசங்களும் நீரில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் இன்னும் வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

இதே வேளை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

ஆகவே பொதுமக்கள் அனைவரும் அவதானமாக செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *