மொரோகோ நில அதிர்வில் 1000ற்கு மேற்பட்டோர் உயிரிழப்பு…!
மொரோக்கோவில் நேற்று இரவு 11.11 க்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1000ற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
6.8 ரிச்டர் அளவில் பதிவான நில நடுக்கத்தில் மாரகேஷ்,அல்ஹவுஸ்,அஷிலால் ,சிஷவ்,டரொண்ட், ஆகிய நகரங்களில் நில நடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இரவு நேரத்தில் நில நடுக்கம் வந்ததால் மக்கள் அதிகளவில் நித்திரையில் இருந்துள்ளனர் .இதன் காரணமாக கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி பலர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதே வேளை தீவிரமாக மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.