விடுதலை

விடுதலை
விடுதலை
புனிதமானது.

தவம்
உதிரம்
வைராக்கியம்
சிந்தி
பெறப்பட்டது.

எவரேனும்
இந்தியாவின்
சுதந்திரம்
விடுதலை
அகிம்சையால்
பெறப்பட்டது
என்ற
சாயலில்
கட்சி
வளர்க்க
காந்தியின்
அகிம்சை
குதிரையின்
மேல்
சவாரி
செய்கின்றனர்.

செத்து
உதிர்ந்த
இனம்
மொழி
கற்பு
மதம்
இவற்றின்
அடையாளங்கள்
பாரத
மண்ணில்
வக்கிரமமாக
மறைக்கப்பட்டன.

வெள்ளையன்
ஆண்டால்
பிரிட்டிஷ்காரன்
நம்மை
ஆளட்டும்
என்றவன்
எல்லாம்
விஸ்வரூப
வளர்ச்சி
அடைந்தார்.

கொள்ளையர்கள்
திருடர்கள்
வியாபாரிகள்
அரசியல்வாதிகள்
மொழி
மதம்
இனம்
கலாச்சாரம்
பண்பாடு
என்று
பணம்
சேர்க்க
கூவி
அழைக்கும்
கோமான்கள்
கோமாளிகள்
எல்லாம்
விடுதலையின்
உணர்வு
அறியாதவர்களே!

தமிழ்
ஈழம்
நாளை
மலர்ந்தாலும்
புரட்சியாளர்கள்
தலைவர்கள்
உயிர்நீத்த
மறவர்கள்
மறவச்சிகள்
புகழ்
மறைக்கப்படலாம்.

குண்டுகளின்
ஓசைகளும்
தோண்டப்படும்
பிணங்களும்
மண்டைஒடுகளும்
எலும்புகளும்
அழியாத
எங்கள்
வீர
மங்கையர்களின்
தியாகங்களும்
கற்புகளும்
மட்டுமே!

அறியும்
விடுதலை
என்னவென்று!

விடுதலை
என்ன
என்று
தெரியவேண்டுமெனில்
தமிழனாக
ஈழத்தில்
பிறந்து
வளர்ந்து
உணர்ந்து
உலகை
எதிர்த்து
பார்!

விடுதலை
உணர்வு
தேசங்களின்
நாளத்தில்
சூடு
மாறாத
இரத்தத்தை
உணர்வாக
உயிராக
கொடையாக
பாய்ச்சட்டும்
கடவுளுக்கே!

உதிரத்தை
வீரத்தின்
கொடையாக
கொடுத்த
கர்ணன்
அறிவான்.

மாவீரன்
அறிவான்.

தூரத்தில்
அருகில்
நிறைய
மாவீரர்கள்
இருக்கலாம்.

போராளிகளின்
தேசம்.
புரட்சியாளர்கள்
பாரதத்தில்
தமிழகத்தில்
ஈழத்தில்
பிறந்தது
போல்
இனி
எங்கேனும்
பிறக்க
இயலாது.

தமிழ்
ஈழத்தின்
விடுதலை
உலக
அரசியலின்
யோக்கியதையை
புரட்டி
போடட்டும்.

விண்ணின்
மண்ணின்
வாழ்த்துக்கள்
விடுதலையின்
ஆர்ப்பரிப்பில்!

கேலோமி🌹🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *