காதலியின் வீட்டின் மீது பெற்ரோல் குண்டு தாக்கிய காதலன் கைது..!

உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் ஒரு யுவதியை
காதலித்ததாகவும் பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்குமாறு கூறிய போது பெற்றோர் மறுத்திருந்த நிலையில்,

குறித்த இளைஞன் தனது குழுவினருடன் வந்து இன்று அதிகாலை குறித்த யுவதியின் வீட்டினை தாக்கி சேதப்படுத்தி வீட்டில் பெட்ரோல் குண்டு தாக்குதலையும் மேற்கொண்டுள்ளார்.

தாக்குதல் மேற்கொண்ட இளைஞனை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவரையும்,

அவருடன் தாக்குதலுக்கு வந்த ஏனையவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானதி தாவடி வன்னிய சிங்கம் வீதியில் பதிவாகியுள்ளது.

குறித்த தாக்குதலில் குறித்த யுவதி உள்ளிட்ட 5 பேர் காயம் அடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியுமா காதல் என்று என்ன தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *