எங்களின் சவத்தை உண்டா உங்களின் உயிரை வளர்க்க வேண்டும..!

எங்கள் பகுதிக்குத்
தொழிற்ப்பேட்டை
வருகுதென்று …
அது வந்த நாளில்
ஆனந்தப் பட்டோம் …

வேலைவாய்ப்புக்கள்
கிடைக்குமென்றும் …
எங்களின் விளைச்சல்
இல்லாப் பொட்டல்காடுகள்
நல்ல விலைக்காவது
போகுமென்றும் …

அட டா …இப்படியோர்
விதியை எழுதி
அது
விசமிட்ட நீரை குடிக்கக்
கொடுக்குமென்றும் …

சுற்றுச்சூழலை முற்றிலும்
கெடுத்து …புற்று நோயை
உண்ணக் கொடுக்குமென்றும் …
நாங்கள் கனவிலும்
கருதவில்லையே 😭😭😭

தயவு தாட்சண்யம் ஏதுமின்றிப்
பணம் விழுங்கப் பார்க்கும்
வருமையையே அறியாக்
கோமான்களே … எங்களின்
சவத்தைத் தின்றா உங்களின்
உயிருடல் வளர்க்க வேண்டும் …
அது கழுகுகளின் புத்தியல்லவா ?

இன்று ஈரோட்டுப் பகுதியிலும் ,
பெருந்துறைப் பகுதியிலும்
ஆழ்குழாய் அடி நீரையும் …
எந்தச் செடிவேரும்
பழித்தொதுக்கும் நிலையானதே
இதில் இனி எங்கள் கதி
என்னாகுமோ ?

முறையாகக் கழிவுநீரை
சுத்தம் செய்து அதை
நிலத்துக்குள்ளோ ?
அல்லது வெளியிலோ ?
அனுப்பு …

இல்லையெனில் விஷம்
கக்கும் ஆலைகளை …
எங்கேனும்
பாலைவனத்துக்கு
மாற்று ….😭😭😭

🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *