மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி..!

மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் 4 விக்கட் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

ஆண்டி குவாவில் அமைந்துள்ள விவியன் ரிச்சர்ட் மைதானத்தில் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைப்பெற்றது நேற்று முன்தினம்.

இதில் நாணயச்சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.இதன் போது 50 ஓவர்கள் நிறைவில் 325 ஓட்டங்களைப் பெற்றது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 48.5ஓவர்களில் 326 ஓட்டங்களைப்பெற்று 6 விக்கட்டுகளால் வெற்றிப்பெற்றது.

கடைசி 4 பந்துகளில் 3 ஆறு ஓட்டங்களை அடித்து ஆடிய ஹோப் 109 ஓட்டங்களைப்பெற்று களத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வெற்றியின் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி, 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *