மனிதனை மறக்கடித்தது இது தான்..!

தொலைப்பேசி


தொலைந்தது
கைபேசியல்ல …
மனிதர்களின் நேரம் …

எல்லா விஞ்ஞானக்
கருவிகளும் …
மனிதனின் நேரத்தை
மிச்சப் படுத்தவே
கண்டறியப் பட்டது …

நிதானமாக நடந்து
சென்று கொண்டிருந்த
மனிதனுக்கு
பொறுமையும்
மன அமைதியும்
நிம்மதியும்
இருந்தது …

இன்றோ ஒரே
நாளில் உலகின்
எந்தெந்த இடத்தையும்
சென்றடையும் …
வேகம் வந்தென்ன ?

ஒரே பரபரப்பு , பதட்டம் ,
அவசரம் என …
மனிதனும்
இயந்திரமாகிப்
போனது தான்
மிச்சம் …

எங்கே போனது
அந்த அமைதியும் …
ஆனந்தமும் ….???

ஒரு வகையில்
நேரத்தை
மிச்சப்படுத்தத்தான்
இத்தனை கருவிகள்
எனில் … அதிக
ஓய்வை அல்லவா ?
பெற்றிருக்க
வேண்டும் … இந்த
மனித இனம்…🤔🤔🤔

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *