மழையுடனான வானிலையால் நெற் பயிர்செய்கை பாதிப்பு..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பெரு வெள்ளம் காரணமாக இம்முறை இம்மாட்டத்தில் செய்கை பண்ணப்பட்ட பெரும்போக நேற்செய்கையில் நெற்செய்கையில் சுமார் 50,000 மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் செய்கை பண்ணப்பட்ட வேளாண்மை,

நீரில் மூழ்கியுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் எஸ் ஜெகநாதன் தெரிவித்தார்.

இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சத்து 85 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பெரும்போக நெற் செய்கை பண்ணப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் ஏற்பட்ட பருவ  மழையின் காரணமாக அதனோடு இணைந்த பெருவெள்ளத்தினால்,

சுமார் 50,000 மேற்பட்ட ஏக்கரில் செய்கை பண்ணப்பட்ட பெரும் போக நெற்செய்கை நீரில் மூழ்கியுள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.

வெல்லாவெளி கொக்கட்டிச்சோலை செங்கலடி. கிரான் வவுணதீவு வாகரை உட்பட பல பிரதேச செயலக பிரிவுகளில் செய்கை பண்ணப்பட்ட பெரும் போக நெற்செய்கைக்கு இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *