இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் 21 பாலஸ்தீனிய பொதுமக்கள் உயிரிழப்பு..!

இஸ்ரேலானது காஸாவில் அமையப்பெற்றுள்ள குவைத் ரவுண்டானாவை இலக்கு வைத்து வான்வெளி தாக்குதல் நடாத்தியுள்ளது.

இதன் காரணமாக 21 பாலஸ்தீனிய பொது மக்கள் உயிரிழந்துள்ளனர்.மேலும் 150 பொது மக்கள் காயமடைந்துள்ளனர்.

கடந்த வருடம் முதல் இஸரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடாத்திவருகின்றது. இதன் காரணமாக இதுவரை 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.பலர் முகாம்களில் தங்கியுள்ளனர்.

இதே வேளை பாலஸ்தீனத்தின் மீதான போரை , ஹமாஸ் போராளிகளை அழிக்கும் வரை நிறுத்தப்போவதில்லை என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமீன் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *