வெப்பமான கால நிலை தொடருமா..?

தற்போதைய வெப்பமான காலநிலை மே மாதம் வரை நீடிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.

காற்றின் வேகம் குறைவடைந்துள்ளதாலும், வளிமண்டலத்தின் தாழ்வான பகுதிகளில் நீராவி அதிகரித்துள்ளதாலும் பல பகுதிகளில் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்திலும் மன்னார், ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், பொலன்னறுவை, மொனராகலை மற்றும்,

வவுனியா மாவட்டங்களிலும் ஏனைய பகுதிகளை விட மிக வெப்பமான காலநிலை நிலவுகிறது.

வெப்பமான காலநிலையினால் ஏற்படும் பாதகமான விளைவுகளைக் குறைக்க கூடிய நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றுமாறு அவர் கேட்டுக் கொள்ளப்படுவதாக மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *