துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிப்பு..!

பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இரவு மாவனெல்ல பதியதொர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

தாகராறு ஏற்பட்டுள்ளதாக மாவனெல்ல பொலிஸாருக்கு கிடைத்த அழைப்புக்கு அமைய பொலிஸார் குறித்த பிரதேசத்திற்கு சென்றனர் .

இதன் போது தகராறில ஈடுப்பட்ட நபர் பொலிஸார் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து மற்றொரு பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

பின்னர் அந்த பொலிஸாரையும் தாக்க முற்பட்ட போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் ,இதன் போது தாக்குதலை நடத்த வந்த நபரின் தந்தை துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இதனையடுத்து மாவனெல்ல பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *